சென்னை: கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவை ஒன்றிய அரசே அகற்றவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்றும் பணியை கண்டிப்பாக தமிழ்நாடு அரசு செய்யாது. ஒன்றிய அரசுதான் அணுக்கழிவுகளை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.