ஒடிசா : ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ஏராளமான ரயில்கள் ரத்தானதால் கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும். பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும். பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந்தோறும் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று வீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.