உத்தரப்பிரேதேசம்: பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் நுழைவுத் தேர்வு மோசடியின் மூளையாக செயல்பட்ட உத்தராகண்ட்டைச் சேர்ந்த 2 பேரை உ.பி. போலீஸ் கைது செய்தது. பீகாரைச் சேர்ந்த ராகுல்குமார், ஜித்தேஷ் குமார் டேராடூனில் கல்வி ஆலோசனை மையம் நடத்தி மோசடிகளை அரங்கேற்றியது கண்டுபிடித்துள்ளனர். ஆன்லைன் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி உறுதி செய்யப்படும் என விளம்பரம் கொடுத்து இருவரும் மோசடியை அரங்கேற்றியுள்ளனர்