நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.யின் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப பிரிவினை அரசியலை பாஜக கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார். இம்முறை மக்கள் மாற்றத்துக்காக வாக்களிக்கப் போகிறார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரிவினைவாத அரசியலை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது; அரசு திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும் என டிம்பிள் கூறினார். தொடர்ந்து பேசிய டிம்பிள் யாதவ், நாட்டின் அரசியல் சட்டத்துக்கு பாஜக ஆட்சியில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். தற்போது நடைபெறும் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான தேர்தலாகும். பொய் பேசுவதில் பாஜகவினர் திறமையானவர்கள் என்பதை புரிந்த மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

Related posts

வேங்கைவயல் விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு

நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி: செல்லூர் ராஜூ பதிவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்