சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களைக் கேட்டு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது. வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.