அடுத்த நிமிடமே பாலம் சீட்டு கட்டு போல் சரிந்து ஆற்றில் மூழ்கியது. சரக்கு கப்பலும் தீப்பிடித்தது. விபத்து நடந்த சமயத்தில் கன்டெய்னர் லாரிகள் உட்பட பல வாகனங்கள் பாலத்தில் சென்றதாக கூறப்படுகிறது.இதில் பல வாகனங்கள் பாலத்துடன் சேர்ந்து ஆற்றில் மூழ்கின. விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இன்று காலை 25 கிமீ அடி ஆழத்தில் கனரக வாகனத்தில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நேரிட்ட போது, பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 தொழிலாளர்களை தேடி வருகின்றனர். இடிபாடுகளையும் குப்பைகளையும் அகற்றும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த பாலம் 1977ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாக பால்டிமோர் மேயர் பிராண்டன் கூறி உள்ளார்.