ராமேஸ்வரம்; தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பிச் சென்றனர். தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று சுற்றி பார்த்து செல்வது வழக்கம். காலை 8 மணிக்கு மேல் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி சென்று ஆய்வுசெய்ய உள்ளனர்.