சென்னை: நேப்பியர் பாலம் அருகே டயர் வெடித்ததில், மயிலாப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமணகரன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக ரமணகரன் மற்றும் அவரது தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.