இதையடுத்து, அம்பலவாணன் பேட்டை பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்னனர். அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.