தமிழ்நாட்டில் போலி பல்கலைகள் எதுவும் கிடையாது: யுஜிசி தகவல்

சென்னை: ஒவ்வொரு மே மாதத்திலும், உயர்கல்வி நிறுவனங்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் முன், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை எச்சரிப்பதற்காக, போலி பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் விவரங்களை பல்கலைக்கழக மானிய குழு(யுஜிசி) வெளியிடுகிறது. அதன்படி, நாடு முழுவதும் செயல்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் 8 நிறுவனங்களையும், உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திராவில் 4 நிறுவனங்களையும் பட்டியலிட்டுள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2 போலி பல்கலைக் கழகங்கள் உள்ளதாகவும், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு போலி பல்கலைக்கழகம் இருப்பதாக யுஜிசி தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி உயர்கல்வி அகாடமி, போலி பல்கலைக் கழகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில சட்டம், மத்திய சட்டம் அல்லது மாகாண சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களால் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்பதையும் யுஜிசி தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு சில இடங்களில் யுஜிசி சட்டத்திற்கு மாறாக, பல நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது தெரிய வந்துள்ளது. இந்த பட்டங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்படாது அல்லது செல்லுபடியாகாது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு யுஜிசி இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்