‘காக்கா முட்டை’ இயக்குநர் வீட்டில் வெள்ளி பதக்கங்கள் தேசிய விருது கொள்ளை

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். தமிழ் திரைப்பட இயக்குநர். தேசிய விருது பெற்ற காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது சொந்த வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டியின் எழில் நகரில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக திரைப்பட வேலையாக மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ளார். உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் அவர் வளர்த்துவரும் நாய்க்கு அவரது டிரைவர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோர் தினசரி வந்து உணவு கொடுப்பதாக தெரிகிறது.

இதன்படி நேற்று மாலை நாய்க்கு உணவளிக்க நரேஷ்குமார் வந்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அப்போது கடைசி விவசாயி திரைப்படத்திற்காக, ஒன்றிய அரசு வழங்கிய தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Related posts

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

வேங்கைவயல் சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு!