கோவை: கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஜூன் 4 வரை ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், இடையர்பாளையம், வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டது. அரசு தொழில்நுட்பக் கல்லூரி சுற்றுவட்டாரப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.