முதல்வர் டிவிட் இயற்கையை காக்க உறுதியேற்போம்

சென்னை: இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம். இயற்கையை காக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில், ‘பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு. சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம். அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு

18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கானதிருத்திய தேர்வு பட்டியல் முடிவை வெளியிட கூடாது: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பு எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு: டான்ஜெட்கோ, பீலா வெங்கடேசன் பதில் தர ஐகோர்ட் உத்தரவு