இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த நிர்மல்குமார் உள்ளிட்ட 5பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே இடஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீட்டின் பலனை வழங்கியதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது.
ஆசிரியர் மற்றும் பொது பிரிவினருக்கு என்று தனித்தனியாக தேர்வுப் பட்டியலை மாற்றியமைத்து நான்கு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணயை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேநேரம், திருத்திய தேர்வுப் பட்டியலை தயாரிக்கும் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளலாம். ஆனால், இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது. வழக்கு முடியும் வரை தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.