சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த பின்ட் என்பவரின் 2 வயது குழந்தை கடத்தப்பட்டதாக ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து உடனடியாக சிசிடிவி பதிவுகளைக் கொண்டு, குழந்தையை கடத்திச் சென்ற 2 பேரை போலீஸ் பிடித்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த துர்கா (29) மற்றும் சித்தராமையா (18) என்பவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் குழந்தையை மீட்டு ஆந்திர தம்பதியிடம் போலீஸ் குழந்தையை ஒப்படைத்தது.