ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தாக்கல் செய்த மனுவில் தன்மீது எந்த தவறும் இல்லை என்றும் மென்பொருள் நிறுவனம் அளித்த பொய் புகாரில் சிபிஐ அதிகாரிகள் தன்னை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகள், ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ தரப்பு வாதிட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம்; மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமின் வழங்கியது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை மதுரை சிபிஐ அலுவலகத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.