சென்னை : பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். தமிழர்களை திருடர்கள் என்று மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை புகார் தெரிவித்துள்ளார்.