தினசரி மார்க்கெட் செயல்பட தொடங்கியது

ராசிபுரம், மார்ச் 21: ராசிபுரம் நகராட்சி கடைவீதி அருகே, தினசரி மார்க்கெட் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. மிகவும் பழமையான அந்த இடத்தின் மேற்கூரை இடிந்தும், சிதிலமடைந்தும் காணப்பட்டது. இதையடுத்து, திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து, சுமார் 85 கடைகளுக்கு மேல் கட்டப்பட்டு புதிய வசதிகளுடன் கட்டிட திறப்பு விழா சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக தினசரி மார்க்கெட், ராசிபுரம் -சேலம் சாலை பழைய பஸ் நிலையம் அருகே, நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் சில மாதங்களாக செயல்பட்டு வந்தது. தற்போது புதிய கட்டிடம் திறக்கப்பட்டதையடுத்து, மார்க்கெட் பழைய இடத்திற்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது.

Related posts

கார் மோதி 3 பேர் காயம்

ஊர்க்காவல் படை ஊழியர் தூக்குமாட்டி தற்கொலை

அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு