சோமனூர், மே 25: கருமத்தம்பட்டி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 18 வார்டாக இருந்த பேரூராட்சியை 28 வார்டாக உயர்த்தி பழைய பேரூராட்சி கட்டிடத்தில் தற்போது நகராட்சி நிர்வாகப் பணிகள் நடைபெற்ற வருகின்றன.