சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். குண்டர் சட்ட உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கர் தாய் கமலா தாக்கல் செய்த மனுவின் விசாரணை பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.