சென்னை : பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியாகி உள்ளது.மேலும் சீர்மிகு திட்டங்களால் தமிழ்நாடு வேளாண்மைத்துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.