2024ம் ஆண்டுக்குள் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த சாலைகள்: அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

வதோதரா: நாட்டில் 2024ம் ஆண்டுக்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குஜராத்தின் வதோதரா நகரம் அருகே உள்ள துமத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,‘‘2024ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து நெடுஞ்சாலைகளும் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்.

நாட்டில் நீங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் நல்ல தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை பார்க்கலாம். நமது நாடு மாறி வருகிறது. வளர்ந்த மற்றும் தன்னிறைவு கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது பிரதமர மோடியின் கனவாகும். பிரதமரின் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவதற்கு உலகத்தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு அவசியமாகும்” என்றார்.

Related posts

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்

கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்