ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ராமநாதம்: புரராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 11.88 லட்சம் வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த வலிநிவாரணி மாத்திரைகள் கொண்டு சென்றனர். ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலிநிவாரணி மாத்திரைகளின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும் என கூறபடுகிறது. வலி நிவாரணி மாத்திரைகள் வாகனத்தில் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருப்புல்லாணி ஆனைக்குடி அருகே சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது 11.88 லட்சம் வலிநிவாரணி மாத்திரைகள் சிக்கியது. போலீசாரை கண்டதும் வாகன ஓட்டுனர் தப்பிய நிலையில் நம்பியான் வலசையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!

ராமநாதபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 6 பேர் காயம்..!!