கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டதாலும், மாமியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள காட்டகரம் கீழத்தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் சத்தியகலா மகனுடன் வசித்து வந்தார். மகனை பொறுப்பாக பார்த்துக்கொள்ள முடியவில்லையே என சத்தியகலா மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சத்தியகலாவை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.