வேறொரு பெண்ணுடன் தொடர்பால் தூங்கிய கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி

பெரம்பூர்: வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்ட மனைவி, தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புளியந்தோப்பு வஉசி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (54). இவர் மண்ணடியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீனத் நிஷா. கடந்த சில நாட்களாகவே இஸ்மாயில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறி ஜீனத் நிஷா, கணவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்‌.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவர் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவரின் தகாத உறவு குறித்து ஜீனத் நிஷா வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பிறகு இஸ்மாயில் உறங்க சென்றுள்ளார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த இஸ்மாயில் மீது மனைவி ஜீனத் நிஷா கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஊற்றியுள்ளார். இதில் இஸ்மாயில் மார்பு, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை: அரசுக்கு தினகரன் கோரிக்கை!

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி