இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவர் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவரின் தகாத உறவு குறித்து ஜீனத் நிஷா வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பிறகு இஸ்மாயில் உறங்க சென்றுள்ளார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த இஸ்மாயில் மீது மனைவி ஜீனத் நிஷா கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஊற்றியுள்ளார். இதில் இஸ்மாயில் மார்பு, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.