பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுரவ் குமார் மற்றும் முன்மன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருமண விழாவில் கலந்துகொண்ட பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுரவ் குமார் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.