டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளனர். நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அடுத்து ஒன்றிய அரசு திட்டத்தை கைவிட்டது. டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக 3 இடங்களில் நிலக்கிரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பை அடுத்து நிலக்கரி சுரங்கம் அமைக்கும் இடங்களின் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் 3 இடங்கள் நீக்கியுள்ளனர்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து