இந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் மற்றும் ஸ்வீடன் நாடுகளை நேட்டோவில் இணைப்பது குறித்த விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல உக்ரைனுக்கு க்ளஸ்டர் வகை வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது குறித்தும் அதை பயன்படுத்த உக்ரைன் இசைவு தெரிவித்துள்ளது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. ஆண்டு கணக்கில் உக்ரைன், ரஷ்ய போர் நீடிப்பது பொருளாதார ரீதியில் அனைத்து உலக நாடுகளுக்கும் நல்லதல்ல என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், இன்றும் நாளையும் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாடு போரை முடிவுக்கு கொண்டு வருமா அல்லது போரை மேலும் தீவிரமாக்குமா என்பது குறித்து உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.