மாவா தயாரித்து விற்ற இருவர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தியபோது, அவ்வழியே வந்த ஒருவரை பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் குட்கா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் இருந்தது. விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மேடி (35) என்பதும், புளியந்தோப்பு பகுதியில் பேக் கடை வைத்து நடத்தி வருவதும், வீட்டில் மாவா தயாரித்து விற்றதும் தெரிய வந்தது. இவருக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்த பெரியமேடு பகுதியை சேர்ந்த விகாஸ் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து