2 பழங்குடி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் காளாஹந்தி மாவட்டத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த 16ம் தேதி இரவு பக்கத்து கிராமத்தில் நடந்த நாடகத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த கும்பல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சமூகத்தை சேர்ந்த தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசில் நேற்று முன்தினம் பிஜிப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

நெல்லை, தூத்துக்குடியில் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை; 5 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம்

ஊட்டி தாவரவியல் பூங்கா: மலர் கண்காட்சியில் புதிய அலங்காரம்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு