புதுடெல்லி: டெல்லியில் நாளை நிதி ஆயோக்கின் 8வது ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கான இலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.