திருமலை: திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்ட வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம், இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய முடியாது, இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.