திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புளிய மரத்தில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.