மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியானது, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது குறித்து தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டதாக உணர்வதால் பிரதமர் அதனை அவருடைய சொத்து போன்று கருதுகிறார். பாஜ மூத்த தலைவர் அத்வானி நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்கப்படுவாரா? என்றும் சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.