தீவிரவாதத்துக்கு நிதியுதவி இந்திய வம்சாவளி தமிழர் கைது: ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிரடி

லண்டன்: ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதி உதவி செய்ததாக இந்திய வம்சாவளி தமிழரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்துள்ளனர். ஹிஸ்புல்லா என்ற லெபனான் தீவிரவாத அமைப்புக்கு இங்கிலாந்து அரசு தடை செய்துள்ளது.ஹிஸ்புல்லாவுக்கு நிதி வழங்கும் செயலில் ஈடுபட்டதாக கூறி நசீம் சையது அகமது என்பவரை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து மேற்கு லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளியான சுந்தர் நாகராஜன் (65) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் பிறந்த அவரை, அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின்படி ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். நசீம் அகமது மற்றும் அவரது நிறுவனங்கள் பெரிய அளவில் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி வழங்கி உள்ளன. நசீமுக்கு சர்வதேச கணக்காளராக சுந்தர் நாகராஜன் செயல்பட்டு வந்து உள்ளார். கலை பொருள் சேகரிப்பாளராகவும், வைர வியாபார டீலராகவும் நசீம் செயல்பட்டு வருகிறார் என லண்டன் போலீசார் தெரிவித்தனர். சர்வதேச கைது வாரண்டின் கீழ் கைதான சுந்தர், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

Related posts

நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வியட்நாம் அதிபரானார் டோ லாம்