இதனை தொடர்ந்து கோயிலை அதிகாரிகள் தாற்காலிகமாக இழுத்து பூட்டினர். இப்பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளலாம் எனவும் அதுவரை கோயிலை தற்காலிகமாக பூட்டுவதாகவும் கூறி அதிகாரிகள் பூட்டு போட்டனர். அப்போது குறிப்பிட சமூகத்தினர் கோயிலை பூட்ட கூடாது என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல தங்களை கோயிலுக்குள் அனுமதிக்க கோரி பட்டியலின மக்களும் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.