டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 9,10-ல் நடந்த தேர்வு முடிவுகள் https://tancet.annauniv.edu/tancet-ல் வெளியிடப்பட்டது. எம்சிஏ, எம்பிஏ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பொறியியல், மேலாண்மை நுழைவுத்தேர்வை 36,139 பேர் எழுதினர். மதிப்பெண் சான்றிதழை ஏப்.3 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே வாறுகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

தமிழ்நாட்டில் கோடை மழை 66 சதவீதம் குறைவாக பெய்துள்ளது : வானிலை மையம்

தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு