சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் தகித்ததால் மக்கள் தவித்து போயினர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை, ஈரோடு, திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, சேலம், வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் தாக்கியது.