சென்னை: தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெப்ப அலையை அடுத்து இன்று 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.