சென்னை: சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான 124 கோடி மதிப்புள்ள 94 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. 73,986 கோடி வங்கி மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த சுரானா நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. வங்கிகளில் பெற்ற 73,986 கோடியை சுரானா நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை என சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. வங்கிக் கடன் தொகையை சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக சுரானா மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.