டெல்லி : அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கைது நடவடிக்கையே சட்டவிரோதம் என்பதால் நேரடியாக அதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தோம் என்றும் கெஜ்ரிவால் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.