இதைக்கண்ட ஹாரோ பிரிக்ஸ் உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான கவின், மயக்க நிலையில் இருந்த சித்ராவை, தகாத வார்த்தையால் பேசி, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில், காயமடைந்த சித்ரா அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கூலித் தொழிலாளியை தாக்கிய கவின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் எஸ்சி. எஸ்டி பிரிவு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகரான கவினை போலீசார் தேடி வருகின்றனர்.