‘கொளுத்தும் வெயிலில் எவ்வளவு விலை அதிகமான காஸ்மெடிக்ஸ் பயன்படுத்தினாலும் அடிக்கும் வெயிலில் ஆளே உருகி விடுகிறோம் என்கையில் காஸ்மெட்டிக்ஸ் எம்மாத்திரம். எனவே பிரைட் நிற சிவப்பு, கருஞ்சிவப்பு, ஸ்மோக்கி ஐஷேடோக்கள் இப்படியான நிறங்களை தவிர்த்துவிட்டு சரும நிறத்திலான பீச், பேய்ஜ் எனப்படும் நியூட் அல்லது வெளிர் நிறங்களை அதிகம் பயன்படுத்தலாம். இவை பார்ப்பதற்கு மேக்கப் போடாதபடியும் இருக்கும். மேலும் நோ மேக்கப் லுக் கொடுக்கும். வெயிலில் உருகி கலைந்தாலும் கூட சருமத்தின் நிறத்தை மாற்றி மேக்கப் வழிந்தது போன்ற தோற்றத்தை கொடுக்காது. பென்சில் காஜால்களைப் பயன்படுத்துவது விரைவில் உருகி சருமத்தில் பரவாது. கலர்பார் போன்ற பிராண்ட் இதில் சிறப்பான ரிசல்ட் கொடுக்கும். அதேபோல் ஐலைனர் சாம்பர் என்னும் பிராண்ட் வாட்டர் ப்ரூப் (water proof) என்பதை தாண்டி ஸ்வெட் ட்ரூப். அதாவது வியர்வை வழிந்தால் கரையாது. நீரில் கரையவில்லை என்றாலும், வியர்வையில் கரைவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே நீங்கள் வாங்கும் ப்ராடக்ட் ஸ்வெட் ப்ரூப் (sweat Proof) ஆக உள்ளதா எனப் பார்த்து வாங்கவும். ஏனெனில் நீருக்கும் வியர்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது’ என்னும் ரம்யா அழகேந்திரன் எப்படிப்பட்ட பிராண்ட் ப்ராடக்டுகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் மேலும் விளக்கினார்.
‘எந்த காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்தினாலும் சரி மேக்கப் போட்டுக்கொள்வதற்கு முன்பு நம்மூர் வெயிலுக்கு முதல் பாதுகாப்பு கவசம் சன்ஸ்கிரீன். ஏதேனும் நல்ல பிராண்டில் குறைந்தது 50 எஸ்.பி.எஃப் (50SPF) உள்ள சன் ஸ்கிரீன் பயன்படுத்திவிட்டு அதற்கு மேல் மேக்கப் ப்ராடக்டுகள் எதுவாயினும் பயன்படுத்தலாம். நான் மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டேன் என்றாலும் கூட சன் ஸ்கிரீன் அவசியம். உடன் கிரீம் மேக்கப் ப்ராடக்டுகளை பயன்படுத்தாமல் பவுடர் ப்ராடக்டுகளை பயன்படுத்தலாம். இதனால் கேக் போன்ற தோற்றம் கொடுக்காது. பனானா பவுடர், பிபி பவுடர் இவைகளை பயன்படுத்த பளிச் தோற்றம் கிடைக்கும். கூடுமானவரை நம் இந்திய ப்ராடக்டுகளான டெர்மா போன்ற ப்ராடக்டுகளை பயன்படுத்தவும். விலையும் குறைவு மேலும் நம்மூர் இந்திய சருமங்களை சோதனைக்குட்படுத்தி நம் நாட்டின் காலநிலைக்கேற்றவாறு ப்ராடக்டுகளை தயாரித்து இருப்பார்கள். மாறாக மேற்கத்திய பிராண்ட் ப்ராடக்டுகளை பயன்படுத்தும்போது அது அவர்களின் காலநிலைக்கு ஏற்றவாறு அதிக குளிர் பிரதேசத்திற்கான காஸ்மெடிக்ஸ்களாக இருக்கும். அவற்றை இங்கே பயன்படுத்தும் போது நம் சருமத்திற்கு ஏற்புடையதாக இருக்காது.
இங்கே டெர்மா, நைகா, ஹிமாலயா, டாஸ்லர் இவைகள் எல்லாம் விலையும் நடுத்தர
வர்க்கத்திற்கு ஏற்றார் போல் குறைவாக இருக்கும் நம் இந்திய கால நிலைக்கும் பொருந்தும். அதேபோல் நாள் முழுக்க மேக்கப்பை பயன்படுத்தி விட்டு வெளியில் சென்று வருவோர் வீட்டிற்கு வந்தவுடன் தாமதிக்காமல் மேக்கப் ரிமூவர் கொண்டு முகத்தை சுத்தம் செய்துவிட்டு முகம் கழுவுவது அல்லது முடிந்தால் குளிரான நீரில் குளித்துவிடுவது நல்லது. ஏதேனும் மாய்ச்சுரைசர், அல்லது சீரம், ஏதேனும் பயன்படுத்த முகச்சருமம் ஓய்வு பெறும். அதுவே வெயிலால் உண்டாகும் கருமை, சருமத்திற்கு அடியில் தங்கிவிடும் வியர்வை அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் வைக்கும். அதேபோல் ஹேர் கலரிங் பயன்படுத்தும் பொழுதும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் காத்திருந்து தலைமுடியை அலசும் விதமான ஹேர் கலர்களை பயன்படுத்தவும். ஐந்து நிமிடத்தில் கலரிங், உடனடியாக டச்சப் இப்படியான ஹேர் கலர்கள் அடிக்கும் வெயிலுக்கு ஏற்கனவே வறண்டு கொண்டிருக்கும் கேஷத்தை மேலும் வறட்சித் தன்மைக்கு உட்படுத்தி நார் போல மாற்றிவிடும். எந்த ஹேர் கலர் பயன்படுத்தினாலும் அன்றைய தினம் அதிகம் தண்ணீர் குடியுங்கள். உடலை குளிர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் மிகவும் அவசியம். முடிந்தால் மாதத்திற்கு இரண்டு முறை வடித்த கஞ்சி, சீயக்காயுடன் தலையை அலசுங்கள். கண்களில் குளிர்ந்த நீரில் அவ்வப்போது கழுவுவது வெள்ளரிக்காய் துண்டுகள் கொண்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது இவைகள் வெயில் காலத்தில் வரும் அரிப்பு, எரிச்சல், வறட்சி, வியர்வை வழிவதால் உண்டாகும் கண் அலர்ஜிகள் இவற்றிலிருந்து கண்களை பாதுகாத்து பிரகாசிக்கச் செய்யும்.
– ஷாலினி நியூட்டன்