ஒடிசா ரயில் விபத்து குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தனது ட்விட்டர் பதிவில், “விபத்து குறித்து ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். ரயில்வே, மின்னணுவியல், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என இத்தனை அமைச்சக பொறுப்புகளையும் அஷ்வினி வைஷ்ணவ் ஒருவரால் கவனிக்க முடியவில்லை. வந்தே பாரத், புல்லட் ரயில் சேவைகளில் கவனம் செலுத்தும் அரசு சாதாரண மக்களுக்கான ரயில் சேவையை சரியாக கவனிப்பதில்லை. ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் இல்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.