இது போன்ற பொய்யான கருத்துக்களை மோடி முன்வைத்தும் ராமர் கோவில் மற்றும் கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தியும் பாஜகவுக்கு ஆதாயம் பெற முயற்சி செய்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் தேர்தல் பிரச்சாரத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில், அடிப்படையற்ற பேச்சுகளை வெளிப்படுத்துவது மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் சூழல் மேலும் மோசமாவதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக தலையிட்டு பிரதமர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யெச்சூரி கேட்டுக் கொண்டுள்ளார்.