திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கருங்காலி என்ற இடத்தில் கடல் சீற்றம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் சாலையில் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மணல் அரிப்பால் பல முறை சாலை துண்டிக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைத்த நிலையில் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.