சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இரு துறை அதிகாரிகளின் பட்டியலை திரட்டி சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. ஆட்சியர்களிடம் விசாரணையை தொடர்ந்து நீர்வளம், கனிமவளத் துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.