சேலம்: சேலம், சின்னக்கடை வீதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமம் இல்லாமல் ரசாயனம் தெளித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.