சென்னை: புது வண்ணாரப்பேட்டையில் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் அன்பழகன் வீட்டில் ரூ.3 லட்சம், 3 சவரன் நகை கொள்ளை போனது. மனைவியுடன் அன்பழகன் கோயிலுக்கு சென்றிருந்த போது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது. 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சாவியை வைத்து கதவுகள் திறந்து இருப்பதை பார்த்து அன்பழகன் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருடிச் சென்றார்களா அல்லது தெரிந்த நபர்களே செய்தார்களா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.