அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு வருமாறு கூறி விலாசத்தையும் கொடுத்துள்ளார். அதன்படி அன்று மாலை தோழி ஒருவருடன் சரண்யா வந்துள்ளார். இரவு நேரமாகி விட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் சென்று விடுகிறோம் என்று இரு பெண்களும் கூறி உள்ளனர். ஆனந்தனும் அவர்கள் இருவரையும் வீட்டில் தங்க வைத்து, இரவில் 3 பேரும் ஜாலியாக பேசியுள்ளனர். பின்னர் டீ வைத்து தருகிறேன் என்று கூறிய சரண்யா சமையல் அறைக்குச் சென்று டீ போட்டு கொடுத்துள்ளார்.
அதை குடித்த ஆனந்தன் சிறிது நேரத்தில் படுக்கை அறையிலேயே மயங்கிவிட்டார். மறுநாள் காலை விழித்துப் பார்த்தபோது, அந்த இரண்டு பெண்களும் மாயமாகி விட்டார்கள். இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தன், பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆனந்தன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தன் வீட்டு அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில், நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.